இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், ‘வடசென்னை’ திரைப்படம் உருவான அதே காலக்கட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, “அரசன்” படம் ‘வடசென்னை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டாலும், அதில் எந்த உண்மையும் இல்லை என்று இயக்குநர் வெற்றி மாறன் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் நடித்த ‘அன்பு’ கதாபாத்திரம் “அரசன்” படத்தில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றி மாறன், “உண்மையில் அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. நான் முதலில் கதை எழுதுவேன், அதன் பிறகு படப்பிடிப்பு, மீண்டும் எழுதுதல், பின்னர் மீண்டும் படப்பிடிப்பு என்ற முறையில் தான் பணிபுரிகிறேன். முன்கூட்டியே எதையும் திட்டமிட முடியாது. எழுதும் போது அந்த எண்ணம் வந்தால், எல்லாம் சரியாக அமைந்தால் அது நடக்கும். இல்லையெனில் நடக்காது, அதுவே உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

