தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த கேள்விகளுக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.
‘பரதேசி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘டி.என்.ஏ’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமான ரித்விகா, Bigg Boss Tamil Season 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். கடந்த ஆண்டு, தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர், விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், சமீப காலமாக அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ரித்விகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், “உங்கள் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனையா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதில், அவரது திருமணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

