தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வரும் சூழலில், அவரை குறித்து Sathyaraj சமீபத்தில் விமர்சனக் கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக ‘தலைவா’ பட கால கட்டத்தை எடுத்துக்காட்டி விஜயை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சர்ச்சை நடுவில், சத்யராஜின் மகனும் நடிகருமான Sibiraj தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
அவர் பகிர்ந்த பதிவில், “உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்” என்ற Vijay நடித்த படத்தின் பிரபல ‘பஞ்ச்’ வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
விஜயின் தீவிர ரசிகராக அறியப்படும் சிபிராஜின் இந்த பதிவு, சத்யராஜின் விமர்சனத்திற்கு மறைமுக பதிலடியாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த விவகம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2026

