தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது தந்தை 86 வயதாகும் நிலையில் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதி உற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்தில் உயிர் பிரிந்தார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்தின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது முதல் ஆளாக உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று அவரது தந்தைக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் அஜித்தின் தந்தையின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


