தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் திலீப் குமார் அவர்கள் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பீஸ்ட் திரைப்படத்தை விஜய்யை வைத்து மட்டும் தான் எடுக்க வேண்டும் என இருந்தேன்.
ஒருவேளை விஜய் சார் இந்த படத்தின் கதைக்கு நோ சொல்லியிருந்தார் இந்தப் படத்தை வேறு எந்த நடிகரை வைத்தும் எடுத்து இருக்க மாட்டேன். விஜய் சாரை மனதில் வைத்துதான் முழுக்க முழுக்க இந்த கதையை எழுதினேன் என தெரிவித்துள்ளார்.


