Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை ஈஸ்வரியிடம் கோர்த்துவிட்ட கோபி. பாக்கியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து எழில், செழியன் பிரச்சனை குறித்து புலம்ப அவர் எழில் கிட்ட உண்மையை சொல்லிடுங்க, அதான் நல்லது. முடிவை அவங்க எடுக்கட்டும் என சொல்கிறார். ‌

அதன் பிறகு இவர்கள் பேசுவதை கோபி பார்த்து விட வீட்டில் ராதிகா இனியா உடம்பு முடியாமல் படுத்திருப்பதை பார்த்து அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். கோபி பாக்கியாவுக்கு பொறுப்பு இல்லை என ஈஸ்வரியிடம் கோர்த்து விடுகிறார்.

அதற்கேற்றார் போல ஈஸ்வரி பாக்கியா வந்ததும் சத்தம் போட வேலை விஷயமாக வெளியே போனதாக சமாளிக்கிறார். அடுத்து கோபி தனியாக வந்து பழனிசாமியிடம் பேசி கொண்டு இருந்ததை பார்த்ததாக வம்பிழுக்கிறார்‌.

அதை தொடர்ந்து கோபியை தேடி பேங்கில் இருந்து ஆட்கள் வந்து பணத்தை கட்ட இரண்டு நாள் டைம் கொடுத்து விட்டு மிரட்டி செல்ல ஈஸ்வரி இதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து நகைகளை எடுத்து கொடுக்க கோபி வாங்க மறுக்கிறார்.

பிறகு பாக்கியா எழிலிடம் விஷயத்தை சொல்லி விடலாம் என முடிவெடுக்க எழில் அமிர்தா மற்றும் நிலாவுடன் சந்தோஷமாக விளையாடி கொண்டிருப்பதை பார்த்து சொல்ல முடியாமல் மறைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 02-11-23
baakiyalakshmi serial episode update 02-11-23