தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே, திரிஷாவை தமிழக அரசியலுடன் தொடர்புபடுத்தி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தனது பாட்டியின் 98-வது பிறந்தநாளை திரிஷா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், “இந்த வயதில் இத்தகைய நாடகத்தனமான விஷயங்கள் சங்கடத்தைத்தான் தரும்… போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என்ற வாசகத்தையும், புருவங்களை உயர்த்துவது போன்ற எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பதிவில், “நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். நல்லதையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இறுதியில் அனைத்தும் உங்களுக்காக சிறப்பாக அமையும் காலகட்டம் இதுதான்” என்ற கருத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
திரிஷாவின் இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

