‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கியதால் அவர் செய்திகளில் இடம்பிடித்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஸ்ரீகாந்த் தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காக ஸ்ரீகாந்த் பாங்காங்க் சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்த அவர், அந்த தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் இந்த குடும்ப சுற்றுலா புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


