நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் துவாவின் 2-வது பிறந்தநாளையும் ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே, தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், “பேபி துவாவும், எங்கள் இதயங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோஷூட்டின்போது தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடையின் விலை சுமார் ரூ.48,643 என தகவல்கள் வெளியாகியுள்ளன.

