தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகும் தொகுப்பாளராகவும் பயணத்தை தொடங்கி அதன் பின்னர் காமெடி நடிகர் ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார். தொடர்ந்து தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
இந்த நிலையில் இன்றோடு திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த பாண்டிராஜ் அதைத் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர்கள் சகோதரனாக, மகனாக இந்த அளவிற்கு வளர்த்து விட்ட தமிழ் பெருமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வாழ்க்கையை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் வாழ்வேன் என கூறியுள்ளார்.

Sivakarthikeyan in 10 Years Travel in Cinema

