72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘அமரன்’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வென்று, தனது 3-வது தேசிய விருதை கைப்பற்றியுள்ளார்.
இந்த சாதனையைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் அவரது மாமாவுமான ஏ.ஆர். ரஹ்மான், சமூக வலைதளங்களில் மனம் நெகிழ்ந்த வாழ்த்து பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “உன்னுடைய 3-வது தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஜி.வி. பிரகாஷ். நமது குடும்பம் இணைந்து பெறும் 10-வது தேசிய விருது இது என்பதால், இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். இசையின் மீது உனக்கு இருக்கும் ஆர்வம், நேர்மை, அர்ப்பணிப்பு எப்போதும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நீ இன்னும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகள். இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், “Love You Sir” என நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது பெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும், ‘வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பாளர் விருதையும் வென்றிருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் கூறியபடி, அவரது 7 தேசிய விருதுகளும், ஜி.வி. பிரகாஷின் 3 தேசிய விருதுகளும் இணைந்து, இந்த இசைக் குடும்பத்தின் மொத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனை தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்துள்ளதாக ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations, @gvprakash on your 3rd National Award. A proud moment for our family as we celebrate our 10th National Award together. Your passion, sincerity, and dedication to music continue to inspire. Wishing you many more milestones ahead. God bless. #EPI
— A.R.Rahman (@arrahman) July 19, 2026

