‘ஜனநாயகன்’ படத்துக்கு புதிய நெருக்கடி.. சிக்கலில் படக்குழு.. வெளியான அதிர்ச்சி தகவல்
விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம், திட்டமிட்டப்படி படம் திரையரங்களில் வெளியாகாத காரணத்தால் அதிருப்தியில் இருக்கிறது. இதனால் தயாரிப்பு தரப்புக்கு அமேசான் நிறுவனம் நெருக்கடி கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், சென்சார் வழக்கில் தணிக்கை குழுவின் நடவடிக்கை காரணமாக படக்குழுவுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தணிக்கை வாரியம் சொன்ன காட்சிகளை நீக்கிய பிறகும் அந்த காட்சிகளையே புகாராக கூறியுள்ளனர் எனவும் தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இச்சூழலில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.


