தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் அவருக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை.
இந்நிலையில், திரிஷா அடுத்ததாக புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மா இந்தி பங்காரம்’ திரைப்படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி. இதையடுத்து, திரிஷாவை வைத்து அவர் வெப் தொடரை இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷா நடிக்க உள்ள இந்தத் தொடர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திரிஷா புதிய களத்தில் நடிக்க உள்ளதால், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

