இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், கடந்த ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விளையாட்டு மற்றும் ஆக்ஷன் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக தொடர்ந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘பெத்தி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.223 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவே, உலகளவில் ரூ.315 கோடிக்கும் மேல் வசூலித்து, இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வெங்கட சதீஷ் கிலாரு சார்பில் ரித்தி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இஷான் சக்சேனா மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை வழங்கியுள்ளது.
ராம் சரணின் திரை ஆளுமை, புச்சி பாபு சனாவின் மாஸ் இயக்கம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் நாட்களிலும் ‘பெத்தி’ திரைப்படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

