அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது எப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் சாருடன் எப்போது அடுத்த படம் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் எல்லாம் சரியாக நடந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் இப்போதைக்கு படத்தின் வகைகளை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம் அஜித் சார் தனது ஆர்வங்களான பந்தயம் மற்றும் சினிமாவை அழகாக சமநிலைப்படுத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் விஜய் சார் ஒரு புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் ஆளுமைகள் என்று புகழ்ந்து பேசி உள்ளார். விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director siruthai siva update for ajith movie

