அளவுக்கு அதிகமாக இஞ்சி சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
பொதுவாகவே உணவுகளின் சுவையைக் கூட்டுவதற்கு இஞ்சியை பயன்படுத்துவது வழக்கம். இது மட்டும் இல்லாமல் இஞ்சி டீ இஞ்சி பால் போல இஞ்சியை பயன்படுத்தி நம் அன்றாட உணவில் நிறைய பயன்படுத்துவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உணவில் இஞ்சி சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இது மட்டும் இல்லாமல் பலவீனத்தை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
எனவே இஞ்சி ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

