Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டிய இனியா.. எழில் மற்றும் செழியன் இடையே ஏற்பட்ட மோதல். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனிய ஸ்கூலுக்கு பஸ்சில் போக மாட்டேன் என சொல்ல இதனால் ஏழில் இனியாவை திட்ட பிறகு ஈஸ்வரி எழில் திட்ட என பிரச்சனை பெருசாகிறது. அதன் பிறகு கோபியின் அப்பா சத்தம் போட்டு அனைவரையும் அமைதியாக இருக்க சொல்ல அவர் ஈஸ்வரியை திட்ட இனியா நான் பஸ்லயே போய் கொள்கிறேன் என போகிறாள்‌.

அதன் பிறகு வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இருக்க ஈபி ரீடிங் எடுக்க வீட்டிற்கு ஆள் வர 17000 கரண்டு பில் வந்திருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சடைந்து அதை வீட்டில் சொல்ல கோபி இருந்திருந்தால் இதெல்லாம் அவனே பார்த்துகிட்டு இருந்திருப்பான் என மீண்டும் பிரச்சனை வருகிறது. ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் பாக்கியாவை குற்றம் சொல்ல ஆரம்பிக்க பிறகு எழில் செழியனை எதிர்த்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாகிறது.

அடுத்ததாக கோபியின் அப்பா சத்தம் போட்டு இருவரையும் அமைதியாக்குகிறார். அடுத்து ஈஸ்வரி மீண்டும் பாக்கியாவை சகட்டுமேனிக்கு திட்டி உள்ளே செல்ல இதற்கெல்லாம் காரணம் பணம் தான் பணம் இருந்தால் இதை எல்லாத்தையும் மாற்றிவிடலாம் என செல்வியிடம் உறுதியாக கூறுகிறார். இதற்காக கண்டிப்பாக பிசினஸை பெருசாக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அடுத்ததாக ரூமுக்குள் சென்று செழியனிடம் நீ பண்ணது சரியா என கேட்க நான் பண்ணது சரிதான் இப்போ இதெல்லாம் யார் பாப்பா என பேச ஜெனி நீ போய் கரண்ட் பில் கட்டு என சொல்கிறார்.

நான் வழக்கமா குடுக்குற காசுல இருந்து ஒரு பைசா கூட அதிகமா தர முடியாது என செழியன் சொல்ல ஜெனி அதிர்ச்சி அடைகிறாள்‌. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update