தமிழ்சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் விசித்ரா. இவர் சினிமா துறையில் பெரும் பிரபலங்களின் ஒருவராகவும் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
நடிகை விசித்ரா ‘தலைவாசல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பல படங்களிலும் குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடி நடிகர்களின் துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானார்.
ஒரு காலத்தில் இவருக்கு ரசிகர்களின் கடிதம் மூட்டை மூட்டையாக வீடு தேடி வந்த வரலாறும் இருக்கிறது. அப்போதான் அவருக்கு சினிமா என்றால் என்ன, ரசிகர்கள் என்றால் என்ன, இப்படிக் கூட ரசிகர்கள் இருப்பார்கள் என தெரியவந்தது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ராசாத்தி தொடரின் மூலம் சின்னத்திரையின் சிந்தாமணி கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவிற்கு மறுபிரவேசம் செய்யவிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘ராசாத்தி’ கதாபாத்திரம் பவர்ஃபுல் கேரக்டர் இருப்பதால் கொடுப்பது தருணம் என்று அதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அவர் கணித்தவாரே ‘ராசாத்தி’ சீரியலில் சிந்தாமணி கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மத்தியில் விசித்திரா பிரபலமாகி வருவதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.


