தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து பாப்புலரான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது பாலிவுட் சினிமா வரை கலக்கி வருகிறார்.
மயோடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அடையாளம் தெரியாத லுக்கில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதைப் பார்த்து ரசிகர்கள் சமந்தா நீங்களா இது? நான் தானு சொல்லிட்டு போட்டோ போடுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram

