தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரன்னரானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது ரோட்டுக் கடையில் தோசை ஊற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இனிமேல் என்னை ஐசு தோச மாஸ்டர் என அழைக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனா என்ன தோசை மாஸ்டருக்கு தோசை தான் ஊத்த வரல. இதோ வீடியோவை பாருங்க
View this post on Instagram

