நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா , திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், இன்று அதிகாலை ரோஜா செல்வமணி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து, சிறப்பு அபிஷேக மற்றும் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, கோவிலில் இருந்த பக்தர்கள் பலரும் ரோஜா செல்வமணி-ஐ கண்டதும் உற்சாகமடைந்து, அவருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

