வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சினேகா,பிரபு பிரகாஷ்ராஜ் ,நாகேஷ், மாளவிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான சரண் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது படம் முடிந்தவுடன் இந்த படத்தை பார்க்க அஜித் சாரும், ஷாலுவும் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன் தியேட்டர்ல யாரும் கிடையாது எங்களுடைய டீம் டெக்னீசியன்ஸ் மற்றும் அவங்க இரண்டு பேர் மட்டும் தான் படம் ஆரம்பச்சதிலிருந்து இரண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. அஜித் சார் எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருந்தாரு என்று கூறியுள்ளார்
படம் முடிந்து வெளியே வந்த பிறகு படம் சூப்பர் காமெடியா இருக்கிறது என்று அஜித் பாராட்டியதால் அப்போதுதான் எனக்கு படம் ஓகே என்று ஒரு ஹோப் வந்ததாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


