தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி கதை சொல்லி முடிக்க மீனா கதை சூப்பராக இருப்பதாக சொல்லி பாராட்டுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து மனோஜ் ரொம்ப கடன் தொல்லைல மாட்டிகிட்டு இருக்காரு நீங்க ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து உதவினீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல உடனே பார்வதி நேராக சிவனிடம் சென்று இந்த மாதிரி ரோகினி 5 லட்சம் பணம் கேட்கிறார் என்கிட்ட இருக்கு ஆனா அவ ரொம்ப பொய் சொல்றத அது எப்படி நம்பி கொடுக்கறது என்று சொல்லிவிட்டு மீனா இருக்கிறதுனால மீனா உத்தரவாதம் கொடுத்தா நான் கொடுக்கிறேன் என்று சொல்ல சிவனும் சரி என சொல்லுகிறார்.
உடனே கீழே வந்து ரோகினி இடம் என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல ஆனா என்னால சேர்த்து வைத்தது கொஞ்சம் இருக்கு மீனா உத்தரவாதம் கொடுத்தா நான் கண்டிப்பா உனக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல ரோகினி மீனாவிடம் தனியாக கூப்பிட்டு பேசுகிறார். உடனே ரோகிணி மீனாவிடம் என்று இந்த ஒரு வாட்டி எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்ல கண்டிப்பான பண்ண மாட்டேன் ஏற்கனவே நான் உனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிட்டு தப்பு மேல தப்பு சொல்லிட்டு இருக்க. இந்த விஷயத்துல வேணா என் புருஷன் கிட்ட கேட்டுட்டு உனக்கு ஹெல்ப் பண்றேன் என்று சொல்ல அது எப்படி நடக்கும் என ரோகிணி சொல்ல அப்ப என்னால உதவி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு மீனா சென்று விடுகிறார் மறுபக்கம் அண்ணாமலை சோகமாக இருக்க அவருக்கு மாத்திரை கொடுத்து ஆறுதல் சொல்லி முத்து படுக்கச் சொல்லுகிறார்.
பிறகு முத்து கோபமாக இருக்க மீனா ஆறுதல் சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் வந்து எனக்கு பேச்சு போட்டி இருக்கு உண்மையை எதற்காக சொல்லணும் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்ல முத்து நான் சொல்லிக் கொடுக்கிறேன் ஒரு உண்மையை நம்ம நேர்மையா பேசிட்டு எல்லாம் பயப்படத் தேவையில்லை ஆனால் ஒரு பொய்ய சொல்லணும்னா அது ரொம்ப உஷாரா இருக்கணும் அந்த ஒரு பொய்யை காப்பாத்த பல பொய் சொல்ற மாதிரி இருக்கும் என்று சொல்ல மீனா முகம் மாறுகிறது. உடனே தூங்கும் போது மீனா உங்க கிட்ட இந்த உண்மையை மறைக்கிறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு என்று மாதிரி நினைக்கிறார் கரண்ட் கட் ஆகும் நேரத்தில் முத்து எழுந்திருத்து கரண்ட் கட் ஆகிடுச்சு என்று உட்கார உங்க கிட்ட தான் உண்மையை மறைச்சுட்டேன் க்ரிஷ் ரோகினி ஓட பையன் தான் என்று சொல்லுகிறார்.
ஆனால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் முத்து இல்லாமல் ரோகினி இருக்கிறார் இந்த இடத்தில் முத்து இருந்தால் என்னவாகி இருக்கும் யாரோ போடுற பிச்சையிலையும் நான் வாழ வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு உடனே கிச்சனுக்கு ஓடிப் போய் கத்தியை எடுக்க மீனா தடுத்து நிறுத்துகிறார் உடனே ரோகினி அழ முத்து வந்தவுடன் என்ன ஆச்சு என்று கேட்க மனோஜ்க்கு ரொம்ப கடன் இருக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார் அதற்கு பிறகு பார்வதி ஆன்ட்டியிடம் பணம் கேட்டேன் அவங்க மீனா உத்தரவாதம் கொடுத்தா தானே சொல்லிட்டாங்க என்று சொல்ல மீனா உங்க சம்மதம் இல்லாமல் நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று சொல்ல அதுவும் கரெக்ட் தான் அவனுக்காக எதுவும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் அண்ணாமலை என்ன சொல்லுகிறார்?அதற்கு குடும்பத்தினரை முடிவு என்ன? என்பதை இன்றைய பார்த்து தெரிந்து கொள்வோம்.


