கருவளையங்களில் இருந்து விடுபட நாம் எளிமையான வழியை பயன்படுத்தலாம்.
நம் முகத்தில் கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையம் அனைவருக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. இது தூக்கமின்மை மற்றும் அதிகமாக போனை உபயோகப்படுத்துவதன் மூலம் கருவளையம் அதிகமாக வர காரணமாகும்.
அப்படி வரும் கருவளையத்தை நாம் எளிதில் மறைப்பது சுலபம் அல்ல.
முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த உருளைக்கிழங்கு சாற்றை ஒரு காட்டன் கொண்டு கண்ணின் கீழ் சுற்றி தொடர்ந்து தடவிக் கொண்டே வர வேண்டும். உருளைக்கிழங்கில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளதால் கருவளையங்களை படிப்படியாக குறைக்க உதவும்.
மேலும் கிரீன் டீ பேக் ரத்த நாளங்களை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் கரு வளையங்களையும் குறைக்கிறது.
இதனைத் தொடர்ந்து குளிர்ந்த பாலை எடுத்து ஒரு காட்டன் துணியில் கண்களுக்கு கீழே நன்றாக தடவ வேண்டும் பிறகு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் கண்களில் உள்ள கருவளையம் குறையும்.
இப்படி நம் வீட்டிலேயே எளிமையான முறையில் நம் முகத்தில் உள்ள கருவளையங்களை நீக்குவது மட்டுமில்லாமல் சருமம் பொலிவாகவும் இருக்கும்.

