நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர்.
இதனிடையே, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

