Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.