தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வரும் போது கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் பேவரட் என்று யாராவது கேட்டால், அனைத்து திரைப்பிரபலங்களும் கொஞ்சம் தடுமாறுவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வானிபோஜனிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சில நொடிகள் கொஞ்சம் பயத்துடனும், தடுமாற்றத்துடனுமே இருந்தார்.
ஏனெனில், யார் பெயரை சொன்னாலும் மற்ற ரசிகர்கள் கோவமாகிவிடுவார்கள், ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால்.
இதனால் சில நொடி யோசித்து, சினிமா என்று வந்துவிட்டார் இரண்டு பேருமே தான் பேவரட்.
எப்படி ரஜினி-கமல் இருந்தார்களோ அப்படித்தான் இவர்களும், பிரித்து என்னால் சொல்ல முடியாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.