தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம், ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி மார்க்கெட்டை இழந்தார்.
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட ஸ்ரேயா தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் காற்று வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram

