90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதையடுத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ரவி தேஜா, தமிழ் மொழிக்கும் தனக்கும் இடையேயான நெருக்கமான உறவு குறித்து உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மொழியின் மீது தனக்கு எப்போதும் தனி ஈர்ப்பு இருப்பதாகவும், அதன் பேச்சுவழக்கில் வெளிப்படும் நகைச்சுவை மற்றும் இயல்பான அழகு தன்னை மிகவும் கவர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், 1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்பகட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையில்தான் தொடங்கியதாக அவர் நினைவுகூர்ந்தார். தனது சினிமா பயணத்திற்கு சென்னை ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்ததாகவும், இந்த நகரம் மற்றும் இங்குள்ள மனிதர்களுடன் தனக்கு மறக்க முடியாத பல நினைவுகள் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து பேசிய ரவி தேஜா, “இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் உண்மையான ஆன்மா” என்று புகழாரம் சூட்டினார். பின்னணி இசை இல்லாமலேயே படத்தைப் பார்த்தபோதும் தனக்குள் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை நிச்சயம் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

Suresh

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

15 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

18 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

18 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

19 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

19 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

19 hours ago