Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

My Struggle in Cinema Began in Chennai in the 90s – Ravi Teja Gets Emotional

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதையடுத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ரவி தேஜா, தமிழ் மொழிக்கும் தனக்கும் இடையேயான நெருக்கமான உறவு குறித்து உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மொழியின் மீது தனக்கு எப்போதும் தனி ஈர்ப்பு இருப்பதாகவும், அதன் பேச்சுவழக்கில் வெளிப்படும் நகைச்சுவை மற்றும் இயல்பான அழகு தன்னை மிகவும் கவர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், 1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்பகட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையில்தான் தொடங்கியதாக அவர் நினைவுகூர்ந்தார். தனது சினிமா பயணத்திற்கு சென்னை ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்ததாகவும், இந்த நகரம் மற்றும் இங்குள்ள மனிதர்களுடன் தனக்கு மறக்க முடியாத பல நினைவுகள் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து பேசிய ரவி தேஜா, “இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் உண்மையான ஆன்மா” என்று புகழாரம் சூட்டினார். பின்னணி இசை இல்லாமலேயே படத்தைப் பார்த்தபோதும் தனக்குள் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை நிச்சயம் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என தெரிவித்தார்.