Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிரஞ்சீவியின் ‘Mega 158’ படப்பிடிப்பு துவக்கம்!.. கிளாப்படித்த பவன் கல்யாண்

Mega 158 Officially Launched

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரது தம்பியும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண், முதல் காட்சிக்கான கிளாப்பை அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பாபி கொல்லி மற்றும் சிரஞ்சீவி மீண்டும் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்காக சிரஞ்சீவி புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் மகளாக நடிக்கிறார். மேலும் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க, இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்த மாஸ் ஆக்ஷன் திரைப்படம், 2027 சங்கராந்தி வெளியீட்டை இலக்காகக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.