BaakiyaLakshmi Serial Episode Update 04-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியன் மற்றும் ஆகாஷ் மூவரும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து இனியாவிற்கும் எங்க அப்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல போலீஸ்காரர்கள் சிசிடிவி வச்சு மட்டும் சுதாகர் அரெஸ்ட் பண்ண முடியாது என்று சொல்ல அப்போ ஐ விட்னெஸ் இருந்தா பண்ணலாம் என்று எழில் சுதாகரின் பிஏவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார். உடனே எழில் என்ன நடந்துச்சுன்னு சொல்லுயா என்று சொல்ல போலீஸ்காரரிடம் சுதாகர் தான் நிதிஷ கொலை பண்ணாரு என்ற விஷயத்தை சொல்லுகிறார்.
பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் போலீஸ்காரர் வீடியோவாக எடுக்கச் சொல்ல முதலிலிருந்து பி ஏ சொல்ல ஆரம்பிக்கிறார் அதாவது நிதிஷ் ரெஸ்டாரண்டில் போதை பொருட்களை விற்க எடுத்துக் கொண்டு வைத்திருக்கும்போது சுதாகர் வந்து பார்த்துவிட்டு இதெல்லாம் விட்டுடுன்னு சொன்னா விட முடியாதா என்று பேச்சுவாக்கில் ஆரம்பிக்க பிறகு கைகலப்பு ஏற்பட்டு இருவரும் அடித்து கொள்கின்றனர் பிறகு நித்திஷ் ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்டு எங்க அம்மாவோட பணத்துல வாங்கின ரெஸ்டாரன்ட் எங்க அம்மாவ மட்டும் கல்யாணம் பண்ண தான் நீ பிச்சை எடுத்துட்டு இருப்ப உன்னை ஜெயிலுக்கு அனுப்புறேன் பாரு என்று சுதாகர் கோபப்படுத்துவது பேசிக்கொண்டே இருக்க கோபத்தில் சுதாகர் சார் எடுத்து நித்திஷ் தலையில் அடித்து விடுகிறார். உடனே நித்திஷ் மயங்கி விழுந்து விட பிஏ எழுப்பி பார்த்து எழுந்திருக்காமல் இருக்கிறார். உடனே இறந்துட்டாரு என்று பி ஏ சொல்ல இந்த பழியை ஏத்துக்கவே ஒருத்தி இருக்கா அது தான் நிதிஷயோட வைப் இனியா என்று சொல்லுகிறார்.
உடனே ரெஸ்டாரண்டில் இருந்து வெளியில் வந்து இனியாவிற்கு ஃபோன் போட்டு ரெஸ்டாரண்டுக்கு வரவைத்த விஷயத்தையும் உடனே பாக்யாவும் வந்து பார்க்க அப்போதும் நித்திஷ் முழிக்காமல் இருக்க அவர்களும் இறந்து விட்டதாக முடிவெடுத்து சென்று விடுகின்றனர் மீண்டும் பிஏ மற்றும் சுதாகர் இருவரும் வந்து பார்க்க நித்திஷ் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிய பிஏ இப்ப தம்பியை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ண தம்பியை காப்பாற்றி விடலாம் என்று சொல்ல இவன காப்பாற்றி அப்புறம் நான் ஜெயிலுக்கு போகவா இதுதான் எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு என்று சொல்லுகிறார்.இனியா தான கொலை பண்ணதா தான் நெனச்சுக்கிட்டு இருக்கா அப்படியே இருக்கட்டும் இவன் கதையை நீயே முடிச்சிட்டு என்று சொல்லுகிறார்.
பிஏ தயங்க நான் உனக்கு எவ்வளவு வேணாலும் தரேன் என்று சொன்னவுடன் அவரும் வேறு வழி இல்லாமல் நிதிஷ் கொலை செய்துவிடுகிறார் இந்த விஷயம் அனைத்தையும் போலீஸ் ஸ்டேஷன் என்று சொல்லிவிட எழில் இந்த கேஸ்ல நாங்க விசாரிச்சு அளவுக்கு கூட நீங்க எதுவுமே விசாரிக்கல எங்க அப்பாவுக்கு பிடிச்சிக்கிட்டு வந்து அவரை அடிச்சு கொடுமைப்படுத்தி ஒத்துக்கிட்ட வச்சிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் பாக்கியா ஈஸ்வரி இனியா என அனைவரும் டிவியில் நித்திஷே கொலை செய்தது சுதாகர் தான் என்றும் சந்திரிகா கொடுத்த பேட்டியையும் பார்த்துக் கொண்டிருக்க இனியா டாடி வந்துருவார் என்று சொல்ல செழியன்,எழிலும் அவரை கூட்டிட்டு வரத்தான் போயிருக்காங்க என்று சொல்லுகிறார். ஈஸ்வரி இந்த குடும்பத்துக்காக கொடுத்த எல்லா கஷ்டமும் போதும் இனிமேல் எங்களால் தாங்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்க பிறகு கோபிக்காக குடும்பத்தினர் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றன அவர் வந்தவுடன் என்ன பேசுகின்றன? பாக்கியா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap
Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…
பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…