SiragadikkaAasai Serial Episode Update 04-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க மீனா முத்துவிடம் ரோகிணி அரெஸ்ட் பண்ண மாமாவுக்கு தான் அவமானம் நம்ம குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்ல முத்துவும் ஆமா அப்பா ரொம்ப வருத்தப்படுவார் என்று சொல்லிவிட்டு போலீஸ்காரர்களிடம் சென்று அந்த சிட்டி தான் ஆளை வச்சு அடிச்சிருக்கா இவங்க பேசதா சொல்லி இருக்காங்க விட்டுடுங்க சார் என்று சொல்ல இவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதே உங்க பொண்டாட்டி தான் அப்புறம் எப்படி சார் விட முடியும் என்று சொன்னார். எங்க குடும்பத்தோட மரியாதை போயிடுவோம் என்று சொல்லி போலீசிடம் எனவும் பேசுகின்றனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் ரோகிணியிடம் போலீஸ் இதுதான் உனக்கு கடைசி வார்னிங் இதுக்கு அப்புறம் இது மாதிரி பண்ண கூடாது இது மாதிரி பண்ணா அரெஸ்ட் பண்ணிடுவேன் என்று மிரட்டி விட்டு பேப்பரில் கையெழுத்து போட சொல்ல ரோகிணியும் கையெழுத்து போடுகிறார்.
பிறகு மருத்துவம் மீனாவும் வெளியில் கிளம்ப ரோகினியை போலீஸ்காரர் நிறுத்துகின்றனர் அதுதான் கேஸ் போடலை சார் என்று சொல்ல இருந்தாலும் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுறவங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா வெளிய விட முடியாது என்று சொல்லிவிடுகின்றனர் பிறகு மனோஜ் மற்றும் ரோகினி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க, முத்து மீனாவும் வெளியே இருக்கின்றனர். மறுபக்கம் அண்ணாமலை கிருஷை தேடிக் கொண்டிருக்க வீட்டில் எங்கும் இல்லாததால் விஜயாவிடம் கேட்கிறார். அது எங்கேயாவது இப்போது விடுங்க அது எதுக்கு தேடிட்டு இருக்கீங்க என்று சொல்ல ஏதாவது சொல்லிட போறேன் என கோபப்படுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ரவிவர கிரிசை காணவில்லை என்று சொல்லுகிறார் இங்கதான் எங்கேயாவது இருப்பானா போய் மாடியில் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன மாடியிலும் கிருஷ் இல்லாததால் இருவரும் வெளியே சென்று தேட முடிவு எடுக்கின்றனர்
அண்ணாமலை விஜயாவிடம் நாங்கள் போய் வெளியே தேடிக்கிட்டு இருக்கோம் வீட்டுக்கு வந்தா எனக்கு போன் பண்ணு என்று சொல்ல சரியான சொல்லுகிறார் மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷன் வெளியில் முத்து மீனா இருக்க அருண் வந்து நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல முத்துவை வெளியில் எடுத்துட்டு வரலாம் என்று சொல்ல முத்து நான் தப்பு பண்ணா தானே வெளியே போகணும் என பின்னாலிருந்து சொல்லுகிறார் பிறகு நடந்த விஷயங்களையும் முத்து தப்பு பண்ணல என்ற விஷயத்தையும் மீனா அருணிடம் சொல்லுகிறார். பிறகு உள்ளே சென்ற அருண் போலீஸ் இடம் அவனை எதுக்கு விட்டீங்க அவன் இது மாதிரி தப்பு பண்றவன் தான் என்று சொல்ல அவன் இந்த தப்பு பண்ணலையே என்று போலீஸ் சொல்லுகிறார் சொந்தக்காரன்னு சொல்ற சொந்த பிரச்சனை வெளியே எடுத்துட்டு வராத போய் உன் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். மறுபக்கம் ரவியும் அண்ணாமலையும் வண்டியில் கிரிசை தேடிக் கொண்டு வருகின்றனர். க்ரிஷ் தெருவில் இருக்கும் ஒரு கோவிலில் ரோகிணிக்கு எதுவும் ஆகக்கூடாது என அழுது கொண்டு வேடிக் கொண்டிருக்கும் அண்ணாமலை கவனித்து விட்டு ரவியை வண்டியை நிறுத்த சொல்லி கிருஷ்டம் வந்து எதுக்குடா சொல்லாம வந்த என்று கேட்கிறார்.
என் பாட்டி தான் ஏதாவது கஷ்டமா சாமிகிட்ட சொல்லி அழ சொல்லுவாங்க அவங்க அழுது நான் பார்த்திருக்கேன் அதனாலதான் அம்மாவை அரெஸ்ட் என்று சொல்லிவிட்டு உடனே ரோகிணி ஆண்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க அதனாலதான் எனக்கு அழுகை வந்துடுச்சு என்று சொன்ன கொஞ்ச நாள் ரோகினி கூட பழகுனது நாளை இவன் எவ்ளோ பாசமா இருக்கா என்று சொல்லிவிட்டு இதுக்கு மேல இப்படி வெளியே வரக்கூடாது என சொல்லி அழைத்துச் செல்கின்றனர் பிறகு வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க போலீஸ் ஸ்டேஷனில் என்ன ஆச்சு என்று தெரியவில்லையே என்று அண்ணாமலை பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ரோகினையும் மனோஜும் வந்துவிட இந்த வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியல என்று அண்ணாமலை சொல்லுகிறார். சம்பந்தமே இல்லாம பணம் கேட்கிறாங்க இந்த வீட்ல வாழ வந்த பொண்ணு ரவுடிங்க கூட சகவாசம் வச்சிருக்க என்று சொல்லிவிட்டு ரோகினியை கூப்பிட்டு என்ன பழக்கம் இதெல்லாம் என்று கண்டிக்கிறார் ரோகினி மன்னிப்பு கேட்க, நம்ம சரியா இருந்தா நேரம் சரியா இருக்கும் என அண்ணாமலை அட்வைஸ் சொல்லுகிறார். பிறகு குடும்பத்தினர் ரோகினியை என்ன சொல்லுகின்றனர்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? அண்ணாமலை என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…