குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் தங்களது மகன் ராகா ரங்கராஜின் மொட்டை அடிக்கும் விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே திருமணமான நிலையில் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன், இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த சூழலில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, குழந்தையின் உயிரியல் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிசில்டாவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தார். குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயரிடப்பட்டது.

இதையடுத்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தேவையான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஆறு மாதங்களாக தனது மகனுக்கான அனைத்து கடமைகளையும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்து வருவதாக ரங்கராஜ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மகனின் எதிர்கால தேவைகளுக்காக தொடர்ந்து ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில், தற்போது ராகா ரங்கராஜின் மொட்டை அடிக்கும் கோயில் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே நிகழ்வில் இணைந்து காணப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Suresh

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

1 hour ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

1 hour ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

2 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

2 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

2 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

19 hours ago