கோபி கேட்ட கேள்வி,ராதிகா சொன்ன பதில்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

கோபியை விட்டு ராதிகா பிரிய பாக்கியா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு பாக்கியா ராதிகா செல்வி என மூவரும் ஒரு ரெஸ்டாரன்ட் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர் ராதிகா நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் உங்க அத்தை ரெண்டு பேரை சேர்த்து வைக்க முயற்சி பண்ணி இருப்பாங்களே என்று சொல்ல,அதெல்லாம் நிறையவே நடந்துச்சு என்று செல்வி சொல்லுகிறார். அக்கா தான் எதுவுமே ஒத்து வரல என்று சொல்ல நீங்க ஏன் கோபி கூட சேர்ந்து வாழக்கூடாது என்று கேட்கிறார். நான் இப்பதான் நிம்மதியா இருக்க திருப்பி விழுந்த கினத்துக்குள்ளே போ சொல்றீங்களா என்னால முடியாது எனக்கு இப்படி இருக்கிறது தான் புடிச்சிருக்கு என்று சொல்லுகின்றனர். என்ன பாத்தா வாழ்க்கையில் தோத்தவங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிற மாதிரியா இருக்கு என்று கேட்க சரி அவருக்கு கொடுக்க வேணாம், பழனிச்சாமி சாருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் என்று செல்வி கேட்கிறார்.

உடனே ராதிகாவோ எனக்கும் அப்படி தோணச்சு என்று சொல்ல உடனே பாக்யா செல்வியிடம் வேறு ஒரு கதையை மாற்றி பேசுகின்றனர். மறுநாள் காலையில் கோபியும் ராதிகாவும் கோர்ட்டுக்கு வர அவர்களிடம் இறுதியாக முடிவுகள் கேட்கப்படுகிறது. ராதிகா டைவர்ஸ் வேண்டும் என்பதில் உறுதியாக சொல்லிவிட கோபியும் வேறு வழி இல்லாமல் ராதிகாவோட சந்தோஷம் இதுதானா எனக்கு டைவர்ஸ் கொடுக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி விடுகிறார்.

பிறகு நீதிபதி டைவர்ஸ் உறுதி செய்த பிறகு இருவரும் கண் கலங்குகின்றனர். ஏதாவது உதவி தொகை வேண்டுமா என்று கேட்க ராதிகா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். பிறகு வெளியில் காத்துக் கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று ராதிகா கேட்கிறார் இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் முடிஞ்சிடும் என்று வக்கீல் சொல்ல அந்த நேரம் பார்த்து ராதிகாவிற்கு ஃபோன் வருகிறது.

போனில் பேசிக் கொண்டே நடந்து வர டைவர்ஸ் ஆயிடுச்சுமா மயூகிட்ட சொல்ல வேணாம் நான் வந்து பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க அங்கு பாக்யா உட்கார்ந்து இருப்பதை பார்த்து பாக்கியா விடம் வருகிறார் நீங்க இங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் என்று ராதிகா சொல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வீங்க என்று நான் ஆசைப்பட்டேன் என்று சொல்லுகிறார். இல்ல நான் ரொம்ப தெளிவாக யோசிச்சுதா இந்த முடிவை எடுத்திருக்க எதிர்கால நான் ரொம்ப கஷ்டப்பட்ட கோபி எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்திருக்காரு ஆனா இதுக்கு அப்புறம் எல்லாத்தையும் நான் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் நானும் உங்கள மாதிரி வாழப் போறேன் என்று சொல்லுகிறார். நீங்க ஏன் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று கேட்க எனக்கு அதுல விருப்பம் இல்லை இதுக்கு அப்புறம் மயூவுக்காக மட்டும்தான் நான் இருக்க போறேன் மயூ பார்த்துக்கிறது மட்டும்தான் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்று பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஹேர் கட் பண்ணலாம்னு இருக்கேன் ஷார்ட்டா கட் பண்ணலாம்னு இருக்கேன் இவ்வளவு கட் பண்ணலாமா என்று ராதிகா பாக்யாவிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்யா டைவர்ஸ் ஆனவர்கள் எல்லாருமே ஃபர்ஸ்ட் ஹேர் கட் பண்ணுவார்கள் என்று நான் படிச்சிருக்கேன் என்று சொல்ல ராதிகாவும் நானும் படித்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். அப்படி பண்ணும் போது சுதந்திரமா இருக்குற மாதிரி தோணும் என்று சொல்ல அதற்கு பாக்கியம் டைவர்ஸ் கிடைச்சாலும் சுதந்திரம் தானே என்று பேசிக்கொள்கின்றனர்.

பிறகு ராதிகாவின் வக்கீல் வந்து கூப்பிட வெயிட் பண்ணவா என்று பாக்யா கேட்கிறார்.நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட பாக்யா நம்பர் சேஞ்ச் பண்ணிடுவீங்களா என்று கேட்கிறார் ஐடியா இருக்கு என்று சொல்ல அப்போ எனக்கு நம்பர் மட்டும் குடுங்க என்று சொல்கிறது கண்டிப்பா தரேன் இல்லனா நீங்க என்ன தேடிட்டு வருவீங்க எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு சொல்கிறார்.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிந்த பிறகு ராதிகாவும் கோபியும் உட்கார்ந்து பேசுகின்றனர். ராதிகா கோபியுடன் எனக்காக ஒரே ஒரு பண்ணுங்க என்று சொல்லிக் கேட்க கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial episode update 14-02-25
jothika lakshu

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

11 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

11 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

11 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

11 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

12 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

12 hours ago