Viswanath & Sons Set for August Release
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான அவரது 45வது படமான “கருப்பு” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வெற்றி கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 46வது திரைப்படத்திற்கு “விஸ்வநாத் & சன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. குடும்ப உணர்வுகளும் உறவுகளும் மையமாக உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
From my favourites #VenkyAtluri and @gvprakash… see u all soon!
Eid Mubarak! #VishwanathAndSons from 14th August@NimishRavi @_mamithabaiju @realradikaa akka @TandonRaveena @SitharaEnts @vamsi84 pic.twitter.com/xtUfvIxQup— Suriya Sivakumar (@Suriya_offl) May 28, 2026
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…
தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேரும் பசில் ஜோசப், அங்கே பல வருடங்களுக்கு முன்பு…