Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டி தீர்த்த கோபி.. பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட ஜெனி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 11.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி தன் வீட்டில் பணம் கேட்டதால் செழியன் பாக்கியாவிடம் சண்டை போட்டார். அதன் பின்னர் அனைவரையும் திட்டி ரூமுக்கு அனுப்பிய கோபி ரூமிற்குச் சென்று அப்டேட்டாக இருக்க அங்கே போன பாக்கியாவிடம் எல்லா பிரச்சினைக்கும் நீதான் காரணம். அந்த ஜெனி பெண்ணை எந்த நேரமும் உன் கூடவே வச்சுக்கிட்டு சுத்துற. இதனால அவனுக்கு கோபம் வராதா அவங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சினை வர நீதான் காரணம். சின்ன பசங்க அவங்கள சந்தோஷமாய் இருக்க விடு என கோபி சத்தம் போடுகிறார். இந்த வீட்டுக்கு வரவே சுத்தமா பிடிக்கல என பேக்கை தூக்கிக் கொண்டு ராதிகா வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்.

அதன்பிறகு ரூமுக்குள் நம்ப ரெண்டு பேர் பிரச்சனைக்கு நாம தான் காரணம் தேவையில்லாமல் நீ ஆன்டி எதுக்கு சொல்றேன் என ஜெனி சொல்ல மீண்டும் இருவருக்குமிடையே சண்டை வருகிறது. அந்த எழில் என் கழுத்தை பிடித்து தளிரும் அப்ப கூட உனக்கு எதுவும் தோணல என கேட்க தோணுச்சு அதனால பண்ண முடியலன்னு தோணுச்சு என சொல்லிவிட்டு ஜெனி வெளியே செல்கிறார்.

பாக்கியா மொட்டை மாடியில் தனியாக நின்று கண்ணீர் விட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த ஜெனி எங்க பிரச்சனைக்கு நீங்க காரணம் இல்லை. அவன் ஏதோ லூசு மாதிரி சொல்றேன் நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி என ஜெனி கூறுகிறார். நீ எதுக்கு மாமா உங்க வீட்டில பணம் கேட்ட என ஜெனியை கேட்க நீங்க ரொம்ப வருத்தப்பட்டு பேசினீங்க உங்களுக்கு உதவி பண்ணனும்னு தோணுச்சு அதனாலதான் கேட்டேன். அது இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நான் நினைக்கவில்லை சாரி என்று கூறுகிறார்.

நீ எனக்கு ஆதரவாய் இருக்க எனக்கு சந்தோஷமா இருக்கு ஆனா உங்களுக்கு உள்ள பிரச்சனை வேண்டாம். நான் எப்பவும் சொல்றதுதான் நீயும் எனக்கு இனியா மாதிரி தான் நீ கஷ்டப்படுறது என்னால பாக்க முடியல. நீயும் செடியிலே எவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, நீங்கள் சந்தோசமா வாழனும். நான் ஒன்னு சொல்லவா எனது கேட்டுவிட்டு பாக்கியா இனிமே நீ எதுக்கு இந்த பிரச்சனையில் தலையிடாத உங்களுடைய வாழ்க்கையை மட்டும் பாருங்க என கூறுகிறார். என்னால் அப்படி இருக்க முடியும்னு தோணல ஆன்ட்டி என கண் கலங்குகிறார் ஜெனி.

அங்கிள் கேட்டதும் செழியன் பணம் கொடுத்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல. அவன் பண்றது எதுவுமே சரியில்லை இது அவளுக்கு சொல்லவும் முடியல சொல்லி புரிய வைக்கவும் முடியல என ஜெனி வருத்தப்படுகிறார். பிறகு இருவரும் மாறிமாறி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்கின்றனர்.

அதன் பின்னர் பாக்கியா சோபாவில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருக்க அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து அமர்கிறார். இந்த வீட்ல பணம் ஒரு பிரச்சனையா போச்சு நானும் மாமாவும் ஊருக்கு போயிடலாம்னு இருக்கும் என சொல்ல பாக்கியா ஏன் அத்தை இப்படி சொல்றீங்க என கேட்கிறார். எங்களால உனக்கு தான் கஷ்டம் அதிகம் நாங்க ஊருக்கு போய்ட்டா உனக்கு பாதி வேலை குறையும் என கூறுகிறார். இந்த வீட்டுல என்னைக்கு தான் பணப் பிரச்சனை இல்ல. மாமா இந்த வீட்டுக்காக எவ்வளவோ பண்ணியிருக்கார் இந்த நேரத்துல நீங்க ஊருக்கு போகும்போது நாங்க அமைதியா இருந்தா அதைவிட பெரிய நன்றி கெட்ட தனம் வேறு எதுவும் இல்லை என வருத்தப்படுகிறார் பாக்கியா.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 11.03.22
Baakiyalakshmi Serial Episode Update 11.03.22