Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை – இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

“When he entered politics, many people didn’t believe in him” – Director RJ Balaji on Chief Minister Vijay.

“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை பாராட்டி பேசியுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் விஜய் அரசியலுக்கு வந்தபோது பலரும் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால், அவருக்கு தன்னம்பிக்கை இருந்தது. இன்று அது நிஜமாகியுள்ளது” என்றார்.

மேலும், “மக்கள் ஒருவரை நம்பும்போது அது மிகப்பெரிய சக்தியாக மாறும். அதுபோலத்தான் எனக்கும் நடந்தது. ‘கருப்பு’ படத்தை நான் இயக்குவதாக அறிவித்தபோது பல கேள்விகள் எழுந்தன. ஆனால், டீசர் மற்றும் டிரெய்லர் வந்த பிறகு மக்களின் பார்வை மாறியது” என்றும் அவர் தெரிவித்தார்.