கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடக மேடைகளில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய திலீப் ராஜ், பின்னர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். ‘ஜனனி’, ‘ரங்கோலி’, ‘குங்கும பாக்யா’, ‘மலேபில்லு’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், டப்பிங் கலைஞர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

