இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்” படத்தில் நடித்து வருகிறார். இதே நேரத்தில், இந்தி படங்களிலும் பிஸியாக உள்ளார். மேலும், சமீபத்தில் நகை விற்பனைத் துறையில் கால் பதித்து தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் குறித்து தமன்னா பகிர்ந்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறுகையில், “ரசிகர்கள்தான் ஒரு பிரபலத்தின் உண்மையான சொத்து. அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பது என் பாக்கியம். என்னை பார்க்கும் போது சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுகின்றனர்.
சிலர் என் உருவத்தை பச்சை குத்தியிருப்பதும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் கண்களில் நீர் வருகிறது. ரசிகர்களின் அந்த அளவிலான அன்பை பார்க்கும்போது புல்லரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

