தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா டீயை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுப்பி விடுகிறார். நான் தானே டீ போடணும் நீங்க எதுக்கு போட்டிங்க என்று கேட்க நீ படிக்கிற வரைக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்ல, இப்போ எல்லாம் எனக்கு படிப்பு வராது என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது ஒரு டிகிரி வாங்கிய என் கையில கொடுத்துவிடு அவ்வளவுதான் டீ குடிச்சிட்டு உட்கார்ந்து படி என்று சொல்ல டீ ஒரு வாய் வைத்துவிட்டு அதிலேயே துப்பி விடுகிறார்.என்ன ஆச்சு நல்லா இல்லையா என்று கேட்க சூடு ஆறிடிச்சு என்று சொல்லுகிறார் சரி கல்யாணம் எடுத்துட்டு வருவான் நீ உட்கார்ந்து படி என்று சொல்லி உட்கார வைத்து நந்தினிக்கு எழுத படிக்க சொல்லி கொடுக்கிறார். பிறகு நந்தினி வெளியில் கோலம் போட்டுக் கொண்டிருக்க ரஞ்சித் மேலே இருந்து நந்தினியை பார்த்து இவ நல்லா தான் இருக்கா இவளை எப்படி வீடியோ எடுக்காம விட்டோம் என்று நந்தினி ரசித்துப் பார்க்க நந்தினி திரும்பி பார்க்கிறார். என்ன பாத்துகிட்டு இருக்கீங்க என்று கேட்க கோலம் அழகாக இருக்கு என்று சொல்லி சமாளித்து விடுகிறார். ஹரிதா வந்து டைனிங் டேபிள் உட்கார கல்யாணம் காபி போடுகிறார். நந்தினி கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே வந்தவுடன் நந்தினியை பார்த்து ஹரிதா முறைக்கிறார். நந்தினியை கூப்பிட்டு சூர்யா கிட்ட நீ சொல்லாமல் வேறு யாரு சொன்னது என்று சொல்ல எனக்கு தெரியாது என்று நந்தினி சொல்ல, கல்யாணம் நான் தான் சொன்னேன் என்று சொல்லுகிறார்.
நந்தினியை அறைந்தது தாங்க முடியாமல் சொல்லிட்டேன் என்று சொல்ல ஓ அதை தாங்க முடியலையா இந்த இத தாங்கிக் கொள் என்று சூடான காபியை முகத்தில் ஒரு பக்கத்தில் ஊற்றி விட்டு சென்று விட நந்தினி கல்யாணத்திற்கு உதவி செய்கிறார். மறுபக்கம் நந்தினி ரூமில் போர்டு தயார்படுத்த இவர் என்ன புதுசா இருக்காரு என்று கேட்க நீ அவர்கிட்ட என்ன சொல்லி அனுப்பிச்ச இனிமே திரும்பி வரவே மாட்டேன்னு சொல்லிட்டாரு இனிமேல் இவர்தான் உள்ள படிக்க வைக்க போறாரு என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நந்தினிக்கு பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கிறார். வந்த வாத்தியாரும் ஆப்பிளிலிருந்து ஆரம்பிக்க நந்தினி அதற்கு கரெக்டான ஸ்பெல்லிங் சொல்லுகிறார் உடனே அவர் நான் இன்னைக்கு உங்களுக்கு பத்து கொஸ்டின் டெஸ்ட் வச்சிருக்கேன் பத்து நிமிஷத்துல எழுதணும் என்ற கொஸ்டின் பேப்பர் கொடுக்க நந்தினி அதில் சாமி பெயர்களை எழுதிக் கொண்டு இருக்க சூர்யாவுக்கு போன் கால் வர இவ்வளவு பத்திரமா படிக்க வைங்க என்று சொல்லிவிட்டு சென்று விட கொஞ்ச நேரம் எழுதிவிட்டு பிறகு வாத்தியாரை உக்கார சொல்லி உட்காரா வைக்கிறார். உட்கார்ந்த உடனே வாத்தியார் தூங்கி விட நல்ல சான்ஸ் இந்த நேரத்தில் புக்கை பார்த்து காப்பி அடித்து எழுதி விடலாம் என்று முடிவெடுத்து நந்தினி வாத்தியாரின் பேக்கில் இருக்கும் புக்கை எடுத்து அதிலிருந்து ஆன்சரை பார்த்து எழுதி விடுகிறார்.
இறங்கி வந்த சூர்யா கார் சாவியை எடுக்காமல் வந்து விட மீண்டும் மேலே வர நந்தினி பார்த்து எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். உடனே கையைத் தட்டி அருமையான டெஸ்ட் என்று பாராட்ட உடனே வாத்தியார் எழுந்து விடுகிறார். இதுதான் நீ நியாயமா இருக்கிற லட்சணமா என்று நந்தினி திட்ட எனக்கு ஞாபகம் வரலை என்று சொல்ல அப்படிதான் இருக்கும் மறக்கும் போதெல்லாம் படிச்சுக்கிட்டே இருக்கணும் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட அவரும் வருகிறார் உடனே கல்யாணத்தைப் பார்த்து கன்னத்தில் என்னாச்சு என்று கேட்க நந்தினி சொல்ல வேண்டாம் என தலையை ஆட்ட சுடுதண்ணி பட்டுடுச்சு என்று சொல்லுகிறார் நந்தினி படிக்கணும் இந்த வாத்தியார் தூங்கக்கூடாது அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி டீ காபி கொடுத்துக்கிட்டே இரு என்று சொல்லுகிறார். நல்லா படிச்சு காப்பி அடிக்காம எழுதணும் என்று சொல்லிவிட்டு கல்யாணத்திடம் பார்க்கச் சொல்லி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி போனில் அருணாச்சலம் ஜெயிலுக்கு போன விஷயத்தைப் பற்றி கண்கலங்கி பேசிக் கொண்டிருக்க ஹரிதா கவனிக்கிறார். நீங்க இரும்பு மனுஷி நீங்களே இப்படி அழலாமா நீங்கதான் இந்த வீட்டோட ஆலமரம் என்று சொல்ல, எல்லாமே கரெக்டு தான் ஆனா என்னால பேலன்ஸ் பண்ண முடியல என்று சொல்ல, சரி அது இருக்கட்டும் நீ எதுக்கு வந்த என்று கேட்கிறார். நீங்கதான் அங்குளை நினைத்து கஷ்டப்பட்டு கிட்டு இருக்கீங்க ஆனா அவன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கான் அவளை படிக்க வைக்க டெய்லியும் கிளாஸ் போயிட்டு இருக்கு அவ ஒன்னும் இல்லாதப்பவே தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறான் ஆனா அவ டிகிரி வாங்கிட்டா எல்லாரையும் தூக்கி போட்டு மிதிச்சு விடுவான் படிக்க வைக்க அவன் ஆசைப்பட்டாலும் அது நடக்க விடாமல் நம்ப தான் பண்ணனும் என்று சொல்லுகிறார்.
முதல்ல அந்த வாத்தியாரை துரத்தி விடணும் அவ படிக்கிறது உங்களுக்கு மட்டும் இல்ல இந்த குடும்பத்துக்கே ஆபத்து என்று சொல்லுகிறார். நந்தினி டெஸ்ட் எழுதிக்கொண்டிருக்க வாத்தியார் முடிச்சிட்டீங்கன்னா பேப்பர் குடுங்க கரெக்ஷன் பண்ணனும் என்று சொல்ல நந்தினி முடித்துவிட்டு பேப்பரை கொடுக்கிறார். ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க பேப்பர் கரெக்ட் பண்ணிட்டு சொல்றேன் என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லியும் ஹரிதாவும் வந்து வாத்தியாரிடம் சூர்யா சொன்ன உடனே வந்துடுவீங்களா ஆன்ட்டி கிட்ட கேட்காம நீங்க பாட்டுக்கு வந்து பாடம் நடத்துவீங்களா என்று சொல்ல, சுந்தரவல்லி இனிமே உங்களுக்கு இங்க இடம் இல்லை நீங்க போகலாம் இந்த வீட்ல யாரு கிட்ட பர்மிஷன் கேட்கணும் என்கிற காமன் சென்ஸ் கூட உங்களுக்கு இல்லையா என்று திட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.


