இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சரிகம நிறுவனம் அவர்களின் கைவசத்தில் உள்ள 134 பாடல்களை இளையராஜா பயன்படுத்த சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது அப்போது 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து ஒலிப்பதிவு உரிமைகள் இசை உரிமைகளை நாங்கள் சட்டபூர்வமாக பெற்றுள்ளோம் ஆனால் இந்த இளையராஜா அந்தப் பாடல்களை தனது சொந்த பாடல் என கூறி அமேசான் மியூசிக் ஜியோ செவன் போன்ற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
எங்கள் நிறுவனத்தின் பாடல்கள் இசையில் பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் 134 படங்களின் பாடல்களை பயன்படுத்தவும் உரிமை கூறவும் கூடாது என்று இளையராஜாவிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


