வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
அப்படி ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்களில் ஒன்றான “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஏ ஆர் ரகுமான். அதாவது ஒரு பாடலுக்கு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி இருந்ததால் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பிலிருந்து அப்போது அப்பாடலுக்கான டியூன் வந்தது அந்த டியூனை வாசித்த போது நான் அழுதுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் இதுதான் நாம் எதிர்பார்த்த பின் என்றும் உணர்ந்ததாக கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


