தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது நான் தனிப்பட்ட வகையில் சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக நான் ஸ்பான்சர்களை தேடுவது கிடையாது ரேஸிங் என்ற ஆற்றல் மிகுந்த விளையாட்டில் முதலீடு செய்வதற்காக தான். ரேஸ் ஓட்டுநர்கள் பிராண்டுகள் கார் உற்பத்தி நிறுவனங்கள் என பலருக்கும் இதனால் நன்மைகள் கிடைக்கும் அதனால் தான் ஸ்பான்சர் காக பல கதவுகளை நான் தட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


