தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சுந்தர் சி அறிக்கையின் மூலம் படத்திலிருந்து விளகுவதாக அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கப் போவதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர் இது மட்டும் இல்லாமல் விரைவில் இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழுவினர் போன்ற அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


