தமிழ் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தி என்றால் அது சந்தேகமின்றி வடிவேலுதான். ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், பின்னர் அவர் அடைந்த உச்சமும், ரசிகர்களின் வரவேற்பும் வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைக்காத ஒன்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ள வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நேற்று (ஏப்ரல் 24) வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலுவிடம், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வடிவேலு மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். “விவேக்கின் மரணம் எனக்கு தாங்க முடியாத வேதனையை அளித்தது. அவரது இறுதிச் சடங்கிற்கு நான் ஏன் செல்லவில்லை என்று பலர் என்னிடம் கேட்டார்கள். ஆனால், நான் நேரில் அவரது வீட்டிற்குச் சென்று, விவேக்கின் மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்,” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “விவேக் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்து விடுவான் என்று நான் நினைக்கவே இல்லை. அவன் இறந்த சமயத்தில் நான் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன். என் வீட்டிலேயே நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து கொண்டிருந்தோம். அந்த சூழ்நிலையில்தான் நான் அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை,” என்று தனது இயலாமையை கண்ணீருடன் வெளிப்படுத்தினார்.
வடிவேலுவின் இந்த விளக்கம் பலரையும் உணர்ச்சியூட்டியது. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, சக கலைஞர்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பையும், அக்கறையையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. விவேக்கின் இழப்பு அவருக்கு எவ்வளவு பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரது வார்த்தைகள் உணர்த்துகின்றன. உடல்நிலை சரியில்லாத நிலையிலும், விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த அவரது மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். வடிவேலுவின் இந்த எமோஷனலான பேச்சு, சமூக வலைத்தளங்களில் பலரின் மனதையும் உலுக்கியுள்ளது. திரையுலகில் சக கலைஞர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் இந்த பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


