தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் தற்போது அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார்.
கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள இவர் அந்தகன் படத்திலும் நடித்துள்ளார். பிரசாந்தின் அப்பா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த பணத்திற்காக நடிகர் பிரசாந்த் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து கூறியுள்ளார்.
அதாவது பத்திரிக்கையாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் அந்தகன் படத்திற்காக நீங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரசாந்த் இந்த படமே என்னுடைய சம்பளம் தான் என பதில் அளித்துள்ளார். மேலும் இவர் கோட் படத்திற்காக ரூ 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


