தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். மாரிமுத்து ஆதி குணசேகரன் ஆக நடித்து சீரியல் மிகப் பெரிய அளவில் ரீச் ஆக காரணமாக இருந்தார்.
அவரது மறைவுக்குப் பின் எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் படியாக இல்லை என்று கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் கதைக்களம் மீண்டும் சூடு பிடித்து பரபரப்பாக நகர்ந்து வந்தது.
இப்படியான நிலையில் தர்ஷினியின் கடத்தல் குணசேகரனின் சதியால் வீட்டு பெண்களுக்கு ஜெயில் தண்டனை என சுத்த போரிங்கான கதைக்கு மாறி உள்ளது. இதனால் பலரும் இயக்குனருக்கு என்னாச்சு ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு? என புலம்பி வருகின்றனர்.


