தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 96 கோடி ரூபாய் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 30 கோடியை நெருங்கியது.
இப்படியான நிலையில் இரண்டாவது நாளை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து இரண்டு நாளில் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


