தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மடோன் அஸ்வின். இவர் தற்போது மண்டேலா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பகிர்ந்திருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது.
அதில் அவர், மாவீரன் திரைப்படம் சூப்பராக உருவாகி வருகிறது, நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும். அதன் பிறகு படத்திற்கான டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#MadonneAshwin in Vikatan awards:
"#Maaveeran SUPER ah Vandhutu iruku????. Whole team was HAPPY with the output????. #Sivakarthikeyan's portions are WRAPPED & 1 week of patch work is left????. Soon we will start DUBBING & post production????⌛" pic.twitter.com/ID36IXUfrP
— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2023

